வியாழன், டிசம்பர் 22, 2016

குறள் எண்: 0508 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0508}

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: ஆராயாமல், பலர் சொல்வதை வைத்து, பிறரைத் தெளிவோரின் பின்பற்றாளர்களும்; தீர்க்க முடியாத துன்பங்களை அனுபவிப்பர்.
(அது போல்...)
சிந்திக்காமல், புறக் காரணிகளைப் பார்த்து ஓருறவில் இணைவோரின் சந்ததியரும்; சீர்படுத்த முடியாத ஒழுங்கீனத்தைக் கொண்டிருப்பர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக