வியாழன், டிசம்பர் 08, 2016

குறள் எண்: 0494 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0494}

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

விழியப்பன் விளக்கம்: தகுதியுடையோர், சாதகமான இடத்தை அறிந்து, தகுதியானச் செயல்களைச் செய்தால்; அவர்களை அழிக்க எண்ணியோர், தம் எண்ணத்தை மாற்றுவர்.
(அது போல்...)
நற்குணத்தோர், ஆரோக்கியமான உடம்பை விரும்பி, நன்மையானப் பழக்கங்களைப் பழகினால்; அவருள் இருக்கும் கிருமிகள், தம் செயல்திறனை இழக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக