வியாழன், டிசம்பர் 01, 2016

குறள் எண்: 0487 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0487}

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

விழியப்பன் விளக்கம்: அறிவுடையோர், தம்முடைய சினத்தை அவசரப்பட்டு வெளிப்படுத்தாமல்; காலம் கைகூடும் வரை, அகத்துள் சினத்தைக் கொண்டிருப்பர்.
(அது போல்...)
திறமுடையோர், தம்முடைய தோல்வியை உடனடியாய் அலசாமல்; மனநிலை இயல்பாகும் வரை, இலக்கில் சிந்தனையைச் செலுத்துவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக