சனி, டிசம்பர் 10, 2016

குறள் எண்: 0496 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0496}

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

விழியப்பன் விளக்கம்: உறுதியான சக்கரங்களைக் கொண்ட உயர்ந்த தேரால், கடலில் பாய்ந்து செல்லமுடியாது; கடலில் பாய்ந்து செல்லும் கப்பலாலும், நிலத்தில் உருளமுடியாது.
(அது போல்...)
திடமான உடலைக் கொண்ட மல்யுத்த வீரரால், வளைந்து யோகா செய்யமுடியாது; வளைந்து யோகா செய்வோராலும், மல்யுத்தம் செய்யமுடியாது.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக