வெள்ளி, மே 05, 2017

குறள் எண்: 0642 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0642}

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

விழியப்பன் விளக்கம்: வளர்ச்சியும்/அழிவும், பேசும் சொற்களில் விளைவதால்; உணர்ச்சியால் உந்தப்படாமல், பேசும் சொற்களில் நிதானத்தைக் கடைப்பிடித்துப் பழகவேண்டும்.
(அது போல்...)
உறவும்/பகையும், இருப்பதைப் பகிர்வதில் விளைவதால்; தனதென்ற கர்வமில்லாமல், பகிரும் உடைமைகளில் தர்மத்தை நிலைநாட்டி வாழவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக