ஞாயிறு, மே 28, 2017

குறள் எண்: 0665 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0665}

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்

விழியப்பன் விளக்கம்: சிந்தனைத் திறனால், வினைத் திறனை வளர்த்து புகழ்பெற்ற அமைச்சர்கள்; அரசாள்பவரின் கவனத்திற்கு உள்ளாகி, எல்லோராலும் பாராட்டப்படுவர்.
(அது போல்...)
உறவுப் பகிர்வால், உடைமைப் பகிர்வை செய்து வாழ்ந்திடும் அன்பர்கள், சமுதாயத்தின் சான்றாக மாறி, அனைவராலும் தொடரப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக