செவ்வாய், மே 30, 2017

குறள் எண்: 0667 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0667}

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்வோரின், உருவத்தை இகழாமல் இருக்கவேண்டும்; அவர்கள் உருண்டோடும் பெரியத் தேரைத் தாங்கும், அச்சாணிக்கு இணையானவர்கள்.
(அது போல்...)
உறவுகளில் இருப்போரின், ஏழ்மையை அவமதிக்காமல் இருக்கவேண்டும்; அவர்கள் சீறிப்பாயும் சொகுசு விமானத்தைத் தரையிறக்கும், சக்கரத்திற்கு ஒப்பாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக