சனி, மே 13, 2017

குறள் எண்: 0650 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0650}


இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துரையா தார்

விழியப்பன் விளக்கம்: தாம் கற்றவற்றைப் பிறர்க்குப் புரியும் வண்ணம், விவரித்து சொல்லாதோர்; கொத்தாகப் பூத்தும், மணக்காத மலர்களுக்கு ஒப்பாவர்.
(அது போல்...)
தாம் பெற்றவற்றைப் பிறர்க்கு உதவும் வண்ணம், பகிர்ந்து அளிக்காதோர்; முழுதாய் பழுத்தும், இனிக்காத பழங்களுக்கு இணையாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக