திங்கள், மே 22, 2017

குறள் எண்: 0659 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0659}


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

விழியப்பன் விளக்கம்: பிறர் கண்ணீர் சிந்த பெற்றவற்றை, நாம் கண்ணீர் சிந்த இழப்போம்; தூய்மையான வினைகளால் பெற்றவற்றை இழப்பினும், அவை மீண்டும் பலனளிக்கும்.
(அது போல்...)
பிறர் உரிமையை அழித்து வெல்வதை, நம் உரிமை அழிய தோற்போம்; உண்மையான உரிமைப்பகிர்வால் வெல்வதைத் தோற்பினும், அவை மீண்டும் வந்தடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக