ஞாயிறு, மே 21, 2017

குறள் எண்: 0658 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0658}

கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் ஒதுக்கிய தீய வினைகளை, ஒதுக்கி வாழத் தவறியோர்க்கு; அவ்வினைகள் முடிவுற்றாலும், தீமையையே அளிக்கும்.
(அது போல்...)
முன்னோர்கள் தவிர்த்த தகாத உறவுகளை, தவிர்த்து வாழ முயலாதோர்க்கு; அவ்வுறவுகள் கைகூடினாலும், மனவுளைச்சலையே தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக