செவ்வாய், மே 16, 2017

குறள் எண்: 0653 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0653}

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்

விழியப்பன் விளக்கம்: தொடர்ந்து வளரவேண்டும் என்ற முனைப்புடையோர்; தமது புகழ் அழிவதற்கு காரணமான, செயல்களைச் செய்வதைக் கைவிட வேண்டும்.
(அது போல்...)
உயர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணமுடையோர்; தமது சுற்றம் தாழ்வதற்கு வழிவகுக்கும், பிரிவினைகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக