வெள்ளி, மே 19, 2017

குறள் எண்: 0656 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0656}

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

விழியப்பன் விளக்கம்: நம்மைப் பெற்றவள், பசியின் கொடுமையை அனுபவிக்க நேர்ந்தாலும்; சான்றோர்கள் தூற்றும், பழியை அளிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது.
(அது போல்...)
நமக்குப் பிறந்தவர்கள், கல்லாமையின் விளைவை சந்திக்க நேர்ந்தாலும்; கற்றவர்கள் வெறுக்கும், இலஞ்சத்தால் கல்வியைப் பெறுவதைச் செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக