புதன், மே 10, 2017

குறள் எண்: 0647 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0647}

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

விழியப்பன் விளக்கம்: சொல்வன்மை உடையோர், சோர்வின்றியும்/அச்சமின்றியும் இருப்பர்; அவர்களை எதிர்த்து வெல்லுதல், எவர்க்கும் அரிதானது ஆகும்!
(அது போல்...)
குடும்பத்தைக் காதலிப்போர், சுயநலமின்றியும்/பொறாமையின்றியும் இருப்பர்; அவர்களை வெறுத்து ஒதுக்குதல், எவர்க்கும் எளிதானது அன்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக