சனி, மே 20, 2017

குறள் எண்: 0657 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0657}

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை

விழியப்பன் விளக்கம்: பழி தரும் வினைகளைச் செய்து, அடையும் செல்வத்தை விட; தூய்மையான வினைகளைச் செய்து, அடையும் சான்றோர்களின் கொடிய வறுமையே உயர்ந்ததாகும்.
(அது போல்...)
அறவழி மீறிய உறவுகள் மூலம், கிடைக்கும் மகிழ்ச்சியை விட; முறையான உறவுகள் மூலம், கிடைக்கும் இல்லறத்தின் சிக்கலான வாழ்வியலே சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக