திங்கள், மே 08, 2017

குறள் எண்: 0645 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0645}

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

விழியப்பன் விளக்கம்: நாம் சொல்லும் சொல்லை விட, வேறொரு சிறந்த  சொல் இல்லை என்பதை உறுதியாய் அறிந்த பின்பே; அச்சொல்லை சொல்ல வேண்டும்.
(அது போல்...)
நாம் சிந்திக்கும் சிந்தனையை விட, வேறொரு உயர்ந்த சிந்தனை இல்லை என்பதை ஆழமாய் உணர்ந்த பின்னரே; அச்சிந்தனையை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக