சனி, மே 06, 2017

குறள் எண்: 0643 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0643}

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

விழியப்பன் விளக்கம்: கேட்டவர் மகிழும் வண்ணமும், கேட்காதவர் கேட்க விரும்பும் வண்ணமும்; தன்மையுடன் பேசுவதே, சொல்வன்மை எனப்படும்.
(அது போல்...)
உறவிலிருப்போர் பெருமிதம் கொள்ளவும், இல்லாதோர் உறவில் இணைய விரும்பவும்; அன்புடன் உறவாடுவதே, உறவுப்பாலம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக