வெள்ளி, செப்டம்பர் 04, 2015

குறள் எண்: 0033 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0033}

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்

விழியப்பன் விளக்கம்: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும், காரணமேதும் கற்பிக்காமல்; இயன்ற அளவில், தவறாமல் அறச்செயல்களைச் செய்யவேண்டும்.
(அதுபோல்...)
இருக்கும் உறவுகள் அனைத்திலும், குறைகளேதும் சொல்லிடாமல்; முடிந்த மட்டும், தவறாமல் அன்பைப் பேணவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக