திங்கள், செப்டம்பர் 14, 2015

குறள் எண்: 0043 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0043}

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

விழியப்பன் விளக்கம்: இறந்து-தெற்கில் இருப்போர்/கடவுள்/விருந்தினர்/சுற்றம்/தானெனும்-சுயம் - இவர்கள் ஐவரிடத்தும், அறநெறியை தவறாமல் பேணுதல் சிறப்பாகும்.

(அது போல்...)

மரம்/செடி-கொடி/சுற்றுச்சூழல்/சிற்றுயிர்/பேருயிர் - இவையைந்தின் வளமும்; அடிப்படையை மறக்காமல் காத்தல் மனிதமாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

2 கருத்துகள்: