சனி, செப்டம்பர் 05, 2015

குறள் எண்: 0034 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0034}


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் 
ஆகுல நீர பிற

விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும் அறத்துடன் இருப்பதால் மட்டுமே உள்ளத்தூய்மை அடையமுடியும்; மற்றவை ஆரவாரத் தன்மையுடையவை.

(அது போல்...)

எந்தநிலையிலும் நீதி/நேர்மை கடைபிடிப்பவர்களே சிறந்த ஆட்சியாளர்கள் ஆவர்; மற்றவர்கள்  வாய்ச்சொல் வீரர்களாவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக