சனி, செப்டம்பர் 26, 2015

குறள் எண்: 0055 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0055}

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை

விழியப்பன் விளக்கம்: தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தொழுது; காலையில் எழும் குணமுடையவள், பெய்யென்று சொன்னால் மழை பொழியும்.
(அது போல்...)
பணத்தை மதிக்காமல், குணத்தை மதித்து; உறவுகளைப் பேணுவோர் சொல்வதை; அவர் சுற்றம் மந்திரம்போல் கடைபிடிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக