வெள்ளி, செப்டம்பர் 18, 2015

குறள் எண்: 0047 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0047} 

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை

விழியப்பன் விளக்கம்: அறநெறியோடு இயல்பான இல்வாழ்க்கையை வாழ்பவன் என்பவன்; அங்ஙனம் வாழ முயற்சிப்போருக்கு முதன்மையாவான்.

(அது போல்...)

பொதுநலனோடு முறையான மக்களாட்சியை நடத்தும் தலைவரே; அதுபோல் ஆட்சியமைக்க முனைவோருக்கு உதாரணமாவார்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக