புதன், செப்டம்பர் 30, 2015

குறள் எண்: 0059 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0059}

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் 
ஏறுபோல் பீடு நடை

விழியப்பன் விளக்கம்: புகழ் சேர்க்கும் இல்லத்தவள் இல்லாதவர்க்கு, தம்மை இகழ்வோர் முன்பு; சிங்கம்போல், இன்பத்திமிருடன் நடத்தல் சாத்தியமில்லை.
(அது போல்...)
மனத்தூய்மை அளிக்கும் அறநெறி அற்றோர், தம்மீதான விமர்சங்களை எதிர்த்து; சான்றோர்போல், தலைநிமிர்த்தி வாதிடுதல் இயலாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக