ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

குறள் எண்: 0056 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0056}

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

விழியப்பன் விளக்கம்: தன்னையும், தன்னை கொண்டவனையும் பேணிக்காத்து; குடும்பத்தின் புகழையும் காத்து, சோர்வற்று இருப்பவளே மனைவியாவாள்.
(அது போல்...)
தன்னையும், தனைச்சார்ந்த மக்களையும் பாதுகாத்து; ஜனநாயக நீதியை நிலைநாட்டி, தடுமாறாது ஆள்பவரே ஆட்சியாளர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக