வெள்ளி, செப்டம்பர் 11, 2015

குறள் எண்: 0040 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0040}


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி

விழியப்பன் விளக்கம்: ஒருவர் பகுத்தறிந்து செய்யத்தக்கது அறச்செயல்களாகும்; அதுபோல், ஆராய்ந்துணர்ந்து ஒழிக்கத்தக்கது பழிச்செயலகளாகும்.

(அதுபோல்...)

ஓர்கட்சி அறமுணர்ந்து தொடரக்கூடியது பொதுநலமாகும்; அதுபோல், உண்மையறிந்து   நிறுத்தவேண்டியது சுயநலமாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக