செவ்வாய், செப்டம்பர் 29, 2015

குறள் எண்: 0058 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0058}

பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 
புத்தேளிர் வாழும் உலகு

விழியப்பன் விளக்கம்: தன்னை மனைவியாகப் பெற்றவரின், அரவணைப்பைப் பெறும் பெண்கள்; வானவர் வாழும் விண்ணுலகின் பெருஞ்சிறப்பைப் பெறுவர்.
(அது போல்...)
தன்னை தலைவனாக ஏற்றோரின், பேரன்பைப் பெறும் தலைவர்கள்; சரித்திர நாயகர்களின் பட்டியலில் முன்னிலை வகிப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக