செவ்வாய், செப்டம்பர் 08, 2015

குறள் எண்: 0037 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0037}



அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

விழியப்பன் விளக்கம்: பல்லக்கைத் தூக்குவோர் மற்றும் அதில் பயணிப்போரை ஒப்பிட்டு - இதுதான் அறவழி என வரையறுப்பது வேண்டாம்.

(அது போல்...)

தண்டனைப் பெறுவோர் மற்றும் தண்டனையை அளிப்போரை ஒப்பிட்டு - இதுதான் சரியென என நிர்ணயித்தல் தவறானது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக