திங்கள், செப்டம்பர் 07, 2015

குறள் எண்: 0036 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0036}


அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை

விழியப்பன் விளக்கம்: நாளை ஆலோசித்து செய்யலாம் என்றெண்ணாமல், இன்றே செய்யும் அறமே; நாம் இறக்கும் காலத்தில், இறவாத் துணையாகும்.

(அது போல்...)

முதிர்ச்சிக்காக காத்திராது, நம் குழந்தைகளின் குறைகளை அவ்வப்போது களைதலே; அவர்களின் வருங்காலத்தை வளமாக்கிட உதவும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக