சனி, ஜூலை 02, 2016

குறள் எண்: 0335 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0335}

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

விழியப்பன் விளக்கம்: நாவையடக்கி - "விக்கல் போல்", நிலையில்லாத உயிர்; உடம்பிலிருந்து மேலே எழும்முன்னே - காலம் தாழ்த்தாது, நற்செயல்களை செய்யவேண்டும்.
(அது போல்...)
நம்மையடக்கி - "குரங்கு போல்", ஓய்வில்லாத மனது; தேடலிலிருந்து தாவி விலகும்முன் -  பருவம் கடத்தாமல், புரிதல்களை அடையவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக