வெள்ளி, ஜூலை 22, 2016

குறள் எண்: 0355 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0355}

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

விழியப்பன் விளக்கம்: எந்த பொருளெனினும், எவ்வகை மயக்கத்தைக் கொடுப்பதெனினும்; அப்பொருளின் உண்மையான தன்மையை உணர்வதே, பகுத்து அறிவதாகும்.
(அது போல்...)
எந்த தொழிலெனினும், எவ்வளவு வருமானத்தை அளிப்பதாயினும்; அத்தொழிலின் தார்மீக அம்சங்களை ஆராய்வதே, தொழில் தர்மமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக