புதன், ஜூலை 20, 2016

குறள் எண்: 0353 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0353}

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து

விழியப்பன் விளக்கம்: ஐயங்களைக் களைந்து, தெளிவுடன் மெய்யைப் பகுத்தறிந்தோர்க்கு; புவியுலகை விட, விண்ணுலகம் மிக அருகாமையில் இருக்கும்.
(அது போல்...)
தடைகளைக் கடந்து, மகிழ்வுடன் பணியை மேற்கொள்வோர்க்கு; சம்பளத்தை விட, வெகுமானம் மிக மகிழ்ச்சியானதாய் இருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக