திங்கள், ஜூலை 25, 2016

குறள் எண்: 0358 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0358}

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

விழியப்பன் விளக்கம்: பிறவியெனும் அறியாமையை அழித்திட; புகழ் என்னும் மெய்ப் பொருளை உணர்தலே, அறிவுடைமை ஆகும்.
(அது போல்...)
பகையெனும் மனநோயை நீக்கிட; மன்னிப்பு என்னும் நல் மருத்துவரை நாடுவதே, அருமருந்து ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக