திங்கள், ஜூலை 18, 2016

குறள் எண்: 0351 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0351}

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

விழியப்பன் விளக்கம்: மெய்யற்றவற்றை மெய்யென்று நம்பும் அறியாமைமாட்சியமையற்ற துன்பம் சூழ்ந்தபிறவிப்பயனுக்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
அறமற்றவற்றை அறமென்று வாதிடும் மூர்க்கம்; மனிதமற்ற அரக்கம் நிறைந்த, செயல்பாட்டிற்கு வித்திடும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக