வியாழன், ஜூலை 28, 2016

குறள் எண்: 0361 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0361}

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து

விழியப்பன் விளக்கம்: ஆசை என்பது, எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்திலும்; தவறாமல், அவர்களின் ஆசைக்குரிய பிறப்பை அளிக்கும் விதையாகும்.
(அது போல்...)
கடவுள் என்பது, எல்லா மனிதர்களுக்கும் எல்லா யுகங்களிலும்; மறுக்காமல், அவர்களின் அறத்திற்குரிய பயத்தை விதைக்கும் காரணியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக