புதன், ஜூலை 06, 2016

குறள் எண்: 0339 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0339}

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

விழியப்பன் விளக்கம்: நிலையற்ற வாழ்வில் - ஒவ்வொரு உறக்கமும், இறப்பைப் போன்றதாகும்; தூங்கியபின் நிகழும் ஒவ்வொரு விழிப்பும், பிறப்பைப் போன்றது.
(அது போல்...)
நிரந்தரமற்ற உணர்வில் - ஒவ்வொரு பிரிவும், கார்மேகம் போன்றதாகும்; மழைக்குப்பின் தொடரும் ஒவ்வொரு தெளிவும், இணைதல் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக