ஞாயிறு, ஜூலை 03, 2016

குறள் எண்: 0336 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0336}

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

விழியப்பன் விளக்கம்: "நேற்று உயிருடன் இருந்தவர், இன்று உயிரோடு இல்லை!" - என்று நிலையாமையை அனுதினமும் உணர்த்தும், உயர்வினைக் கொண்டது இவ்வுலகம்.
(அது போல்...)
"முன்பு பகையுடன் இருந்தோர், இப்போது பகையுடன் இல்லை!" - என்று வாழ்வியலை தொடர்ந்து கற்பிக்கும், உறவுகளை உடையது வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக