செவ்வாய், ஜூலை 19, 2016

குறள் எண்: 0352 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0352}

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

விழியப்பன் விளக்கம்: மயக்கம் நீக்கிய, குற்றமில்லாத பகுத்தறிவை உடையவர்க்கு; அறியாமை எனும் இருள் மறைந்து, இன்பம் விளையும்.
(அது போல்...)
இரசாயனம் அகற்றிய, அழிவில்லாத விவசாயம் செய்வோர்க்கு; வீட்டுமனை என்ற பேராசை விலகி, வாழ்வியல் எளிதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக