செவ்வாய், ஜூலை 05, 2016

குறள் எண்: 0338 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0338}

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு

விழியப்பன் விளக்கம்: முட்டைக் கூட்டைப் பிரிந்து, பறக்கும் பறவையைப் போன்ற; நிலையற்ற தன்மை உடையதே, உடம்புடன் உயிருக்குண்டான உறவு.
(அது போல்...)
சுமந்த ஏவுகணையைப் பிரிந்து, உலவும் விண்கலத்தைப் போன்ற; தற்காலிக ஆயுள் கொண்டதே, செயலுடன் உணர்ச்சிக்குண்டான பிணைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக