சனி, ஜூலை 23, 2016

குறள் எண்: 0356 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0356}

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

விழியப்பன் விளக்கம்: அனைத்தையும் கற்றறிந்து, மெய்ப்பொருளை உணர்ந்தோர்; மீண்டும் மண்ணுலகில் பிறக்காத, உயரிய நிலையை அடைவர்.
(அது போல்...)
சிக்கல்களை ஆராய்ந்தறிந்து, உறவுகளைப் பேணுவோர்; மீண்டும் சிக்கல்களைச் சந்திக்காத,  உன்னத வாழ்வைப் பெறுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக