வெள்ளி, ஜூலை 08, 2016

குறள் எண்: 0341 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0341}

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

விழியப்பன் விளக்கம்: ஒருவர் எவ்வொன்றின் மேலும், எல்லாப்பற்றையும் துறப்பதால் விளையும் துன்பம்; அப்பொருட்கள் இல்லாத துன்பத்தைவிட குறைவேயாகும்.
(அது போல்...)
ஒருவர் எந்த-உறவின் மீதும், நெருக்கத்தைக் குறைப்பதால் விளையும் அழுகை; அவ்வுறவுகள் பிரிந்துதரும் அழுகையைவிட நன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக