திங்கள், ஜனவரி 02, 2017

குறள் எண்: 0519 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0519}

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு

விழியப்பன் விளக்கம்: கொடுத்த வினையின்பால், மாறாத முனைப்புடன் இருப்போரின் நட்பை; தவறாக நினைப்போரை விட்டு, புகழெனும் செல்வம் விலகும்.
(அது போல்...)
இணைந்த உறவின்பால், குறையாத அன்புடன் இருப்போரின் சிறப்பை; இழிவாக விமர்சிப்போரை விட்டு, மகிழ்ச்சியெனும் ஊக்கம் மறையும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக