வெள்ளி, ஜனவரி 13, 2017

குறள் எண்: 0530 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0530}

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்

விழியப்பன் விளக்கம்: சுற்றத்திலிருந்து, காரணமின்றி பிரிந்து பின் காரணத்தோடு வருவோரை; அரசாள்பவர், வேண்டியவற்றைச் செய்துப் பின்னர் பொறுமையாய் ஆராய வேண்டும்.
(அது போல்...)
குடும்பத்திலிருந்து, பணத்துக்காக விலகிப் பின் பணத்துக்காக வருவோரை; குடும்பத்தினர், மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பின்னர் முழுமையாய் ஆராயவேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக