புதன், ஜனவரி 25, 2017

குறள் எண்: 0542 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0542}

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி

விழியப்பன் விளக்கம்: மழையின் அளவைச் சார்ந்து, உலக உயிர்களின் வாழ்க்கை இருப்பது போல்; மன்னனின் செங்கோலைச் சார்ந்து, குடிமக்களின் வாழ்க்கை அமையும்.
(அது போல்...)
உயிரணுக்களின் இயல்பை ஒட்டி, உடல் உறுப்புகளின் செயல்பாடு இருப்பது போல்; மனதின் எண்ணங்களை ஒட்டி, மனிதர்களின் செயல் அமையும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக