செவ்வாய், ஜனவரி 03, 2017

குறள் எண்: 0520 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0520}

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்ய நியமிக்கப்பட்டவர் நேர்மை தவறாத வரை, உலகமும் நேர்மை தவறாது; எனவே, அரசாள்பர் அதிகாரிகளை தினந்தோறும் ஆராய வேண்டும்!
(அது போல்...)
குடும்பத்தை வழிநடத்த முற்படுவோர் வாய்மை மறக்காத வரை, குடும்பத்தினரும் வாய்மை மறவார்; ஆகையால், குடும்பத்தலைவர் குடும்பத்தினரை எப்போதும் பாதுகாக்க வேண்டும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக