புதன், ஜனவரி 11, 2017

குறள் எண்: 0528 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0528}

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்

விழியப்பன் விளக்கம்: எல்லோரையும் பொதுவாய் பார்க்காமல், ஒவ்வொருவரின் தனித்திறனையும் மன்னன் ஆய்ந்தறிந்தால்; அவ்வியல்பைப் பார்த்து, பலரும் மன்னனைச் சூழ்ந்து வாழ்வர்.
(அது போல்...)
அனைவரையும் பணக்காரராய் பாவிக்காமல், ஒவ்வொருவரின் வசதியையும் கல்விநிறுவனங்கள் உணர்ந்தால்; அதைப் பயன்படுத்தி, பலரும் அந்நிறுவனங்களில் படித்து முன்னேறுவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக