திங்கள், ஜனவரி 16, 2017

குறள் எண்: 0533 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0533}

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு

விழியப்பன் விளக்கம்: மறதியெனும் குறையுள்ளோர், புகழ் அடைதல் சாத்தியமில்லை! உலகிலுள்ள எவ்வகை கல்வியைப் பயின்றோர்க்கும், இது பொதுவான கருத்தாகும்.
(அது போல்...)
தானெனும் அகந்தையுள்ளோர், பிறவிப்பயன் பெறுதல் அரிதானது! புவியிலுள்ள எவ்வித சக்தியைக் கொண்டோர்க்கும், இது சமமான விதியாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக