வியாழன், ஜனவரி 19, 2017

குறள் எண்: 0536 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0536}

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல்

விழியப்பன் விளக்கம்: எவரிடத்திலும்/எந்நாளும் மறதியில்லாத நிலைப்பாடு, தவறாமல் வாய்க்குமானால்; அதற்கு ஒப்பாக நன்மைப் பயப்பது, வேறேதுவும் இல்லை.
(அது போல்...)
எப்படைப்பிலும்/எவ்விதத்திலும் குறையில்லாத சமூக-அக்கறை, தொடர்ந்து இருக்குமானால்; அதற்கு ஈடாகப் பிறவிப்பயன் தருவது, வேறேதும் இல்லை.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக