செவ்வாய், ஜனவரி 31, 2017

குறள் எண்: 0548 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0548}

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்

விழியப்பன் விளக்கம்: குடிமக்களால் எளிதில் அணுகமுடியாத, முறையான செங்கோலை செலுத்தாத அரசாள்வோர்; தாழ்மையான நிலையை அடைந்து, தானாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
உறவுகளால் கருணையோடு மதிக்கப்படாத, சரியான மனிதத்தைப் பகிராத மனிதர்கள்; ஆதரவற்ற முதுமையை அடைந்து, சுயத்தை இழப்பர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக