செவ்வாய், ஜனவரி 24, 2017

குறள் எண்: 0541 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0541}

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

விழியப்பன் விளக்கம்: நடந்தவற்றை ஆழ ஆராய்ந்து, தெளிவுடன் நீதி வழங்குவதற்காக; எவரிடமும் சார்பின்மையோடு இருந்து, இறைத்தன்மைக் கொண்டிருப்பதே - செங்கோன்மை ஆகும்.
(அது போல்...)
கொள்கையை ஆழ உணர்ந்து, உண்மையுடன் உரிமையை நிலைநாட்ட; இயல்பு வாழ்க்கையைப் பாதுகாத்து, அறவழியில் நடப்பதே - போராட்டம் ஆகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக