புதன், ஜனவரி 18, 2017

குறள் எண்: 0535 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0535}

முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்

விழியப்பன் விளக்கம்: மறதியால், எதிர்வரும் துன்பங்களுக்கு முன்பே திட்டமிடத் தவறுவோர்; துன்பங்கள் வந்தபின், தம் மறதியை எண்ணி வருந்திடுவர்.
(அது போல்...)
சோம்பலால், முதுமைப் பிணிகளுக்கு இளமையில் தயாராக மறுப்போர்; முதுமை வந்தபின், தம் சோம்பலை நினைத்து வருந்துவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக