சனி, ஜனவரி 21, 2017

குறள் எண்: 0538 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0538}

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

விழியப்பன் விளக்கம்: "திருக்குறள்" போன்ற புகழப்பட்ட விடயங்களை, போற்றிப் பின்பற்ற வேண்டும்; அப்படி செய்யாமல் மறந்தோர்க்கு, ஏழு பிறவியிலும் பயனில்லை.
(அது போல்...)
"மழலை" போன்ற அற்புதமான விடயங்களை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்; அப்படி செய்யத் தவறியவர்க்கு, ஏழு இசைகளிலும் இன்பமில்லை.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக